அமெரிக்காவின் அதிரடி முடிவு: பரஸ்பர வரி 3 மாதங்களுக்கு நிறுத்தம்!
10 ஏப்ரல் 2025 | Kalvi World Official | உலக செய்திகள்
வாஷிங்டன்:
உலக வணிகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்கா தனது "பரஸ்பர வரி" (Reciprocal Tariff) விதிப்பை 90 நாட்களுக்கு (3 மாதங்களுக்கு) நிறுத்திவைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸென்ட்:
“பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி — தற்போதைக்கு 90 நாட்கள் வரை நிறுத்தப்படும். ஆனால், அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக, 10% வரி தொடரும்.”
பரஸ்பர வரி என்றால் என்ன?
அமெரிக்கா முன்னதாக கூறியது போல், ஒரு நாடு அமெரிக்கா பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவிலான வரியை அமெரிக்காவும் அந்த நாட்டின் பொருட்களுக்கு விதிக்க வேண்டும் என்பது தான் பரஸ்பர வரி கொள்கை.
டிரம்ப்பின் ஆணையால் உருவான விளைவுகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து,
- இந்திய பொருட்களுக்கு சராசரியாக 26% வரி,
- சீன பொருட்களுக்கு 125% வரி,
- ஐரோப்பிய பொருட்களுக்கும் 25% வரி,
என்பது போன்று கடும் வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதனால் உலக வணிகத்தில் வரலாறு காணாத அளவிலான வணிகப் போர் பதற்றம் உருவாகி, சர்வதேச பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ந்தன.
இப்போது எதற்காக இந்த மாற்றம்?
இந்த கடுமையான நிலைமைகளை சமாளிக்கவே அமெரிக்கா தனது பரஸ்பர வரியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது உலக வணிகத்திற்கும் பங்குச் சந்தைகளுக்கும் ஒரு தளர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: உலக வர்த்தகச் சூழ்நிலையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. வர்த்தக மாணவர்கள், UPSC/SSC/IBPS போன்ற போட்டித் தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் இதைப் கவனிக்க வேண்டியது அவசியம்.
Kalvi World Team
மேலும் இத்தகைய அறிவிப்பு, வர்த்தகச் செய்திகள் மற்றும் கல்வி அப்டேட்டுகளைப் பெற:
வாசகர்கள் கேள்வி:
உங்களது எண்ணங்களை கீழே கமெண்ட் பாக்ஸில் பகிருங்கள்! இந்த தீர்மானம் இந்திய பொருட்களுக்கு நன்மையா? பாதிப்பா?
படித்ததற்கு நன்றி! நீங்களும் பகிருங்கள் – அறிவு பரவட்டும்!